கை தட்டுங்க எந்த நோயும் எட்டிப்பார்க்காது!

கை தட்டி ரசித்து சிரிப்பதன் மூலம் எந்த நோயும் அண்டாமல் நம்மை பாதுகாக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனதை உற்சாகமாக வைத்துக்கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக கை தட்டி ரசியுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

நம் நாட்டில் 1 மணி நேரத்தில 90 பேர் மாரடைப்பு வந்து மரணமடைகின்றனர். இதயநோய் பாதிப்பிற்கு ஆளாவதில் உலகத்திலேயே இந்தியர்கள்தான் முதலிடம் வகிக்கின்றனர். இதற்குக்காரணம், நம் வாழ்க்கை முறை. நல்ல வருமானம் கிடைத்து, வசதி இருந்தாலும் மன அமைதி இல்லாததால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்தியர்களுக்கு நோய் ஏற்பட உடலியல் காரணங்களை விட உளவியல் காரணங்கள்தான் என்கின்றனர் மருத்துவர்கள்.

மகிழ்ச்சியின் திறவுகோல்

இதயநோய் உள்பட எல்லா நோய்களுக்கும் காரணமாக இருப்பது நம் மனம்தான். அதனால்தான் எண்ணம் போல் வாழ்வு அமையும் என்று கூறியுள்ளனர். எதற்கும் உணர்ச்சிவசப்படாமல் அனைத்தையும் சாதாரணமா எடுத்துக்கிற நிலை வந்தால் உடம்பை எந்த நோயும் நெருங்காது என்கின்றனர் மருத்துவர்கள்.

வெற்றிதான் மகிழ்ச்சியின் திறவுகோல் என்பதை விட மகிழ்ச்சியாக இருப்பதுதான் வெற்றி என்று எண்ண வேண்டும். இதற்கு நன்றாக மனது விட்டு சிரிப்பதும், கை தட்டி ரசிப்பதும் அவசியம் என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள். 

அக்குபிரசர்

கை தட்டுவதே ஒரு சிகிச்சைதான். கை தட்டும்போது அக்குபிரஷர் ட்ரீட்மென்ட் நடக்கிறது. மூளையும் பிற உறுப்புகளும் உற்சாகமா இயங்குகிறது என்கிறனர் மருத்துவர்கள். மனிதர்களின் கைகளில் உள்ள நரம்புகள், இதயம், சிறுநீரகம், லிவர், நுரையீரல் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. இரண்டு கைகளையும் இணைத்து தட்டுவதன் மூலம் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இதனால் பல வித நோய்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது.

எலும்பு புற்றுநோய்

தைவான் நாட்டில் கை தட்டுவதன் மூலம் எலும்பு புற்றுநோயினை குணப்படுத்தியுள்ளனர். எலும்பு புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அந்த நபர் திபெத் சென்று தலாய்லாமா வை சந்தித்துள்ளார். அப்பொழுது அவர் 20 நிமிடங்களுக்கு கைகளை சேர்த்து வைத்து தட்டச் சொன்னார். அதேபோல் தினசரி அரை மணிநேரம் இந்த பயிற்சியை மேற்கொள்ளச் சொன்னார். ஆச்சரியப்படும் வகையில் அவரது எலும்பு புற்றுநோய் குணமானது.

நம் உடம்பில் உள்ள ரத்த நாளங்கள் வெறும் 2 மில்லிமீட்டர் குறுக்களவு கொண்டவை. டென்ஷன் ஆகும்போது அட்ரினலின், கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகமா சுரந்து அந்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்திடும். இந்த சுரப்பை கட்டுப்படுத்தும் சக்தி இயல்பாவே நம் உடலில் இருக்கிறது.

சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, கெட்ட பழக்கங்கள் இல்லாத நல்ல வாழ்க்கைமுறை தேவை. மனசு மகிழ்ச்சியா இருந்தா, என்டார்பின், மெலட்டோனின், செரட்டோனின் ஹார்மோன்களும், ஹெச்.டி.எல்ங்கிற நல்ல கொழுப்புகளும் உருவாகும். 99 சதவீதம் அடைப்பு இருந்தாக்கூட தானா கரைஞ்சிடும். இது கற்பனையில்லை. மருத்துவ உண்மை என்று உறுதியாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.

தினசரி காலையில் 20 நிமிடங்களுக்கு கை தட்டுங்கள் உங்களுக்கு எந்த நோய் இருந்தாலும் குணமாகும் என்று உறுதியாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.

காசா? பணமா? கை தட்டித்தான் பாருங்களேன்.

No comments:

Post a Comment