Labels

Showing posts with label Health and Foods. Show all posts
Showing posts with label Health and Foods. Show all posts

சருமத்தை காக்கும் கற்றாழை ஜெல் பேக்!

வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கப்படும் சோற்றுக்கற்றாழை முக அழகை பாதுகாக்கும் அழகு சாதனப்பொருளாக பயன்படுகிறது. கோடைகாலத்தில் சருமம் வறட்சியடையாமல் பாதுகாப்பதோடு கொப்புளங்கள், முகப்பரு போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. கற்றாழையை உபயோகித்து காசு செலவில்லாமல் சருமத்தை பாதுகாப்பதற்கு அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை படியுங்களேன்.


கோடை கொப்புளங்கள்

கோடைகாலத்தில் சருமத்தில் ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால் வலியும் எரிச்சலும் ஏற்படும். இதற்கு கற்றாலை சிறந்த மருந்தாக செயல்படுகிறது. கற்றாழையை பறித்து அதனை பிழிந்து சாறு எடுத்து அதில் சில துளிகள் எலுமிச்சை சேர்த்து கலக்கவும். இதனை ஒரு பருத்தி துணியில் தொட்டு முகத்தில் நன்றாக அப்ளை செய்யவும். பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். இதனால் சருமம் பொலிவாகும். சருமம் வறட்சி நீங்கி ஈரப்பதத்தை தக்கவைக்கலாம்.

மூலிகை பேக்

கற்றாழைச் செடி அனைத்து சருமத்திற்கும் ஏற்ற சிறந்த மூலிகையாகும். இதனை ஜெல் போல செய்து முகத்தில் பூசி வர சருமம் ஜொலிக்கும். கற்றாழை செடியை பறித்து நன்றாக அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்க்கவும் கண்களைத் தவிர பிற பகுதிகளில் திக்காக பேக் போல போடவும். பின்னர் நன்றாக மூன்று நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். இதனால் முகத்தில் உயிரிழந்த செல்கள் உதிர்ந்து விடும். பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கிளன்சர் கொண்டோ அல்லது குளிர்ந்த நீரிலோ கழுவி விடலாம். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வர முகம் பொலிவாகவும் மென்மையாக இருக்கும்.

முகப்பரு வராது

கற்றாழையை பறித்து அதை நன்றாக கொதிக்கும் நீரில் போட்டு வேக வைக்கவும். இதனை எடுத்து நன்றாக அரைக்கவும் அதனுடன் தேன் சேர்க்கவும். இந்த கலவையை நன்றாக முகம் முழுவதும் அப்ளை செய்யவும். நன்றாக காயவிட்டு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை வாரம் ஒருமுறை செய்து வர முகப்பரு இருந்தால் மறைந்து விடும். முகப்பருவே வடுக்களோ ஏற்படாது. சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் கற்றாழையுடன் வெள்ளரிக்காய், தயிர் சேர்த்து அரைத்து பேஸ்ட் போல செய்யவும். பதினைந்து நிமிடம் ஊறவைத்து நன்றாக குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியோடு இருக்கும்.

உருளைக்கிழங்கு போளி டிஷ்

உருளைக்கிழங்கில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது. அந்த உருளைக்கிழங்கை வைத்து குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் எப்படி போளி செய்வதென்று பார்ப்போமா!!!


தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 2 கப்

உருளைக்கிழங்கு - 6

வெங்காயம் - 2

தக்காளி - 1

மிளகாய்த் தூள் - 1 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு, கொத்தமல்லி - சிறிது


செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, உதிர்த்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு மைதா மாவில் உப்புடன் சிறிது எண்ணெய், தண்ணீர் சேர்த்து போளிக்கு பிசைந்து கொள்வதுபோல் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக்கி சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் போட்டு வதக்கி, அத்துடன் வேகவைத்து உதிர்த்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் கலந்து கிளறி, பச்சை வாசனை போனதும் கொத்தமல்லி தூவி இறக்கி வைக்கவும்.

பிறகு ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து அதனை தட்டி நடுவில் அந்த உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, பிறகு சாதாரண போளி செய்வது போல் தோசைக்கல்லில் போளியைப் போட்டு எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கங்களையும் வேக வைத்து எடுக்கவும்.

இதோ சுவையான உருளைக்கிழங்கு போளி ரெடி!

தலை முடியை பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!

தலை குளித்து முடித்து விட்டு காயவைக்கும் போது கொஞ்சம் முடி உதிர்ந்தாலே போதும். எதையை இழந்து விட்டது போல நினைத்து ஃபீல் செய்து கொண்டிருப்பார்கள். முடி கொட்டுவது என்பது இயல்பானதுதான்.

நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 200 முடிவரை இழக்கிறோம். கூந்தலை பராமரிப்பதில் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன. இது ஆண், பெண் என அனைத்து தரப்பினருக்கும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மருந்துகளை அளிக்கிறது.

மூன்று தோஷங்கள்

கூந்தல் வளர்ச்சிக்கும் மூன்று தோஷங்களுக்கும் தொடர்புள்ளது. இந்த தோஷங்கள் உடலில் சம நிலையில் இருந்தாலே கூந்தல் உதிர்வது தடுக்கப்படும். அஜீரணம், மலச்சிக்கல், நரம்பு மண்டல நோய்கள் இவற்றாலும் முடி உதிரலாம். பாதத்திலிருந்து தலை வரை செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டாலும், முடி உதிரலாம். காலில் வெடிப்பு, கால்ஆணி, இவைகளாலும் முடி உதிரலாம்.

பெண்களுக்கு, அவர்களில் மாதவிடாய் கோளாறு தலைமுடியையும் பாதிக்கும். அதிக உதிரப்போக்கு பலவீனத்தை உண்டாக்கும். பிரசவம், கருச்சிதைவு இவற்றின் போது, உதிர இழப்பு அதிகமானால், முடி உதிரும். 

முடி ஈரமாக இருக்கும் போது பலவீனமாக இருக்கும். அப்போது தலைவாரிக் கொண்டால் முடி சுலபமாக உடைந்து விடும். அதிகமாக ஹேர் டிரையர் உபயோகிப்பதும் தவறு. முடியை கருமையாக்க பூசும் சாயமும் முடி உதிர காரணமாகலாம்.

சம அளவு பச்சை நெல்லிக்காயையும், மாங்காயையும் சேர்த்து கூழ் போல் அரைத்து காலை குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக தடவி பின்னர் எப்பொழுதும் போல குளிக்கவும். இது முடிக்கு பலத்தையும் கிருமி நாசினி தன்மையையும் அளித்திடும். 

பிரிஞ்சி இலையுடன் வேப்பிலை மற்றும் 25 கிராம் துளசி இலையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து டீஸ்பூன் எடுத்து ஐம்பது மி.லி. தண்ணீரில் குழைத்துத் தலையில் தடவிக் குளிக்கமுடி உதிர்வது நிற்கும். வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, குளிர்வித்து, கூந்தலை அலசவும்.

எண்ணெய் மசாஜ்

தேங்காய் பால், தேங்காய் எண்ணைபோல, முடிக்கு நல்லது. தேங்காய் பாலை நேராகவே தலையில் தடவி அலசலாம். தேங்காய் பாலுடன் எலுமிச்சை விதைகளை அரைத்து சேர்த்துக் கொள்ளலாம். தினமும் 10-15 நிமிடம், பாதாம் எண்ணை அல்லது தேங்காய் எண்ணையால் மசாஜ் செய்யவும்.

கற்பூரவில்லையின் பச்சை இலைகளையும் சேர்க்கலாம். ரோஜா இதழ்களை நன்கு அரைத்து, தேங்காய் பாலுடன் கலந்து, அரை மணி கழித்து அலசலாம். தேங்காய் பால், மருதோன்றி இலை, இவற்றை அரைத்து, சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து, ஷாம்பு போட்டு குளித்தபின், தலையில் தடவி வரலாம்.

தேங்காய் பாலுடன், காயவைத்த வெட்டிவேர், வெள்ளைமிளகு போட்டு கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கொட்டாது. நெல்லிக்காய் பொடி, வேப்பிலைப் பொடி இரண்டையும் தேங்காய் பாலில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

அரை கப் தேங்காய் எண்ணெய் கால் கப் எலுமிச்சை சாறு கலந்து வேர் கால்களில் படுமாறு மசாஜ் செய்ய கூந்தலில் பொடுகுத் தொல்லை இருந்தால் நீங்கும்.

தலைக்கு குளிர்ச்சி

வெந்தயத்தை தனியாக அரைத்து தேய்த்துக் குளிக்கலாம். கால் மணி நேரத்திற்கு மேல் தலையில் வைக்க வேண்டாம். குளிர்ச்சி அதிகமாகிவிடும். ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள் தவிர்க்கவும். வெந்தயத்தை பொடி செய்து காலையில் வெறும் வயிற்றில் மோருடன் குடித்துவர, உடல் சூடுகுறையும். இல்லை இரவு படுக்குமுன்பு ஒரு டீஸ்பூன் வெந்தய பொடியை, வெந்நீருடன் சேர்த்து சாப்பிடலாம். உடல் சூடு குறைந்து முடி நன்கு வளரும்.

மிளகு, வெந்தயம், நெல்லி முள்ளி இவை மூன்றையும் அரைத்து தலையில் தேய்த்து கொண்டால் முடி வளர நல்லது. எலுமிச்சை விதை மிளகு இரண்டையும் விழுதாக அரைத்து தடவலாம்.

பித்தம் தணியும்

உடலில் பித்தம் அதிகமானலே நரை ஏற்படும். எனவே பித்தத்தை தணிக்க ஆயுர்வேதத்தில் மருந்துகள் கூறப்பட்டுள்ளன. 2 டீஸ்பூன் ஹென்னா பவுடர் 1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் வெந்தய பவுடர், 2 டீஸ்பூன் புதினா சாறு, 2 டீஸ்பூன் துளசி சாறு கலந்து பேஸ்ட் போல செய்து தலைக்கு அப்ளை செய்யவும். 2 மணிநேரம் ஊறவைத்து பின்னர் குளிக்கவும். சாதாரண ஷாம்பு போட்டு தலையை அலசலாம்.

தலைக்கு குளித்து வந்தவுடன் மரிக்கொழுந்தை வைத்து அல்லது திருநீற்றுபச்சிலையை தேய்த்துவிட்டு, கொண்டை போட்டுக் கொண்டால் சூடு குறைந்து முடி வளரும். கொத்தமல்லி விதையுடன் தனியா இஞ்சியை துருவி சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணை சேர்த்துக் குளித்தால் பித்தம் போகும். முடி உதிர்தல் நிற்கும்.

செம்பருத்திப்பூவை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும் முடி உதிர்தல் குறையும். செம்பருத்தி இலை, பூ இவற்றை சீயக்காய் தூளுடன் கலந்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வருதல் மிகவும் நல்லது. கெமிகல்கள் கலந்த ஷாம்புவை உபயோகித்தபின், செம்பருத்தி இலையை வெந்நீரில் வேக வைத்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் ஷாம்புவினால் ஏற்படும் எந்த வித ரசாயன தீங்கும் ஏற்படாது. பச்சை கறிவேப்பிலையை பால் விட்டு அரைத்து, தலையில் தடவி, 1 மணிநேரம் கழித்து குளித்தால் முடி உதிர்வதை தவிர்க்கலாம்.

வழுக்கையை தடுக்க

கூந்தல் வளர்ச்சிக்காக பாரம்பரியமாகவே ஆயுர்வேத தைலங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நீலிபிருங்காதி தைலம், பிருங்காமலாதி தைலம், பிருங்கராஜ் தைலம், தூர்வாதி தைலம், கருசிலாங்கண்ணி தைலம், பொன்னாங்கண்ணி தைலம் போன்றவை கூந்தல் வளர்ச்சிக்காக உபயோகப்படுத்தப்படுகின்றன. அதிமதுரத்தை இடித்து பொடி செய்து, எருமைப்பால் சேர்த்து நன்றாக அரைத்து, எருமைப்பாலிலேயே குழைத்து, தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், வழுக்கை விழுந்த இடங்களில் முடிவளரும். தினமும் 1 டீஸ்பூன் திரிபால சூரணம், படுக்குமுன், தண்ணீர் அல்லது பால் சேர்த்து குடிக்கவும். முடி வளர்ச்சிக்கு உதவும்.

புகை போடுங்க

தலைக்கு குளித்தபின், கூந்தலுக்கு புகைபோட, வெந்தயம், துளசி, வேப்ப இலைகள், இவைகளை பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சி பெருகும் என்றும் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. உடலின் தற்காப்பு சக்தியை மேம்படுத்த பயன்படும் நரசிம்மரசாயனம், குமாரயஸ்வசவம், பிருங்கராஜஸவம் போன்ற உள்ளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளால் முடி வளர்ச்சி பெருகும்.

சுவையான ஃபிங்கர் ஃபிஷ்

வீட்டில் இதுவரை மீன் குழம்பு, மீன் ஃப்ரை என்று செய்திருப்போம். அந்த மீனில் கொஞ்சம் வெரைட்டியா ஈஸியா செய்வதுன்னா அது ஃபிங்கர் பிஷ். அந்த ஃபிங்கர் பிஷ் எப்படி செய்யலாம்-னு பார்க்கலாமா!!!

தேவையான பொருட்கள்

நெய் மீன் - 5 துண்டு
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கார்ன் ப்ளார் - 3 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
சாட் மசாலா - கால் ஸ்பூன்
சீரக தூள் - கால் ஸ்பூன்
அரிசி மாவு - ஒரு ஸ்பூன்
மைதா மாவு - ஒரு ஸ்பூன்
சோயா சாஸ் - கால் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன்
முட்டை - ஒன்று
கேசரி பவுடர் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
ப்ரெட் க்ரம்ப்ஸ் - தேவையான அளவு
ஆயில் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை

முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும். மீன் ஆறிய பிறகு மீனில் உள்ள முட்களை எல்லாம் நீக்கி விட்டு நன்றாக உதிர்த்து விடவும்.

பிறகு உதிர்த்த அந்த மீனில் கார்ன் ப்ளார் சேர்த்து மெதுவாக பிசையவும். பின் விரல் நீளத்திற்கு சிறு சிறுத் துண்டுகளாக உருட்டி வைக்கவும்.

பின்னர் கார்ன் ப்ளார், மிளகாய் தூள், இஞ்சிபூண்டு விழுது, மிளகு தூள், சாட் மசாலா, சீரக தூள், அரிசி மாவு, மைதா மாவு, சோயா சாஸ், எலுமிச்சை சாறு, கேசரி பவுடர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்து கடைசியாக முட்டை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

பின் உருட்டிய மீனை மாவில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

இப்போது சுவையான ஃபிங்கர் ஃபிஷ் ரெடி.

சத்தான காளான் கிரேவி

காளான் ஒரு சத்தான உணவுப் பொருள். இதில் வைட்டமின் பி மற்றும் கலோரியின் அளவு குறைவாக இருக்கிறது. இது டையட் மேற்கோள்வோருக்கு மிகச்சிறந்த உணவு. இந்த காளான் கிரேவியை சப்பாத்தி, பரோட்டா, நாண், ஆப்பம், தோசை, இட்லி, சாதம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம். சரி, அந்த காளான் கிரேவி செய்யலாமா!!!






தேவையான பொருட்கள்

காளான் - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி -1
இஞ்சி,பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
புதினா,மல்லி - சிறிது
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 3
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும். மற்றொரு வெங்காயத்தையும் நறுக்கி, அதனுடன் தக்காளி, தேங்காய், முந்திரி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு, அதில் காளானை போட்டு அலசி, நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், இஞ்சிபூண்டு பேஸ்ட், கரம் மசாலா, புதினா, மல்லி, பச்சைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அத்துடன் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும்.

பிறகு அந்த காளானுடன் மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டவும். பின்னர் சிறிது உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீரை விட்டு நன்கு கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும் அரைத்த கலவையைச் சேர்த்து தேவைக்கேற்ற தண்ணீர் ஊற்றி தேங்காய் வாடை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.

இப்போது சுவையான சத்தான காளான் குருமா ரெடி!

தாகத்தை தணிக்க மட்டுமல்ல தர்பூசணி... ஆண்களுக்கு அவசியமானது

கோடையில் தாகத்தை தணிக்க பலரும் தர்பூசணியின் தயவை நாடுவது வழக்கம். சாலையோர கடைகளிலும், கோடைகால சிறப்பு ஸ்டால்களிலும் காணக்கிடைக்கும் தர்பூசணி பழத்திற்கு தாகம் தணிக்கும் சக்தியோடு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவர் ஒருவரின் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்மையை அதிகரிப்பதில் வயாகரா மாத்திரையின் சக்தியை விட அதிகமான சக்தி தர்பூசணி பழத்துக்கு உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


கோடைகாலமும் தர்பூசணியும் 

இயற்கையானது அந்தந்த சீசனிற்கு ஏற்ப பழங்களையும், காய்கறிகளையும் விளைவிக்கிறது. கோடையில் உஷ்ணத்தை சமாளிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை தர்பூசணிப் பழம். இது உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு எண்ணற்ற நன்மைகளையும் தருகிறது.


தர்பூசணியில் உள்ள சத்துக்கள்

தர்பூசணி பழத்தில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. பசலைக்கீரைக்கு சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏயும் காணப்படுகின்றன. வைட்டமின் பி6, வைட்டமின் பி1 உள்ளன. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன.

இயற்கை வயாக்கரா

தர்பூசணி பழம் ஓர் இயற்கையான 'வயாக்ரா' என்பது தான். 

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்பவர் தர்பூசணி பழம் குறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு வியக்கத்தக்க தகவல்கள் தெரியவந்துள்ளன. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவல் ஒரு இன்ப அதிர்ச்சியாகும். தர்பூசணிக்கு `ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. 

தர்பூசணியில் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம்.

இதயநோயாளிகளுக்கும் நன்மை

தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நம் ஊரில் தாகம் தணிக்க தர்பூசணி பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, விதைகளை நீக்கி விட்டு சாப்பிடுவார்கள். இல்லையெனில் பாழத்தை துண்டுகளாக்கி சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவி சாப்பிடுவார்கள். மேலும் பழ ரசமாகவும் சாப்பிடுவார்கள். ஆனால் இந்த கட்டுரையை படித்த பின்னர் பழத்தின் சிவப்பு பகுதியை விட்டு விட்டு வெண்மை பகுதியைத்தான் அதிகம் சாப்பிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

ஆரோக்கியம் தரும் 'குளு குளு' இளநீர்!

கோடையில் தாகத்தை தணிக்க பலரும் தர்பூசணியின் தயவை நாடுவது வழக்கம். சாலையோர கடைகளிலும், கோடைகால சிறப்பு ஸ்டால்களிலும் காணக்கிடைக்கும் தர்பூசணி பழத்திற்கு தாகம் தணிக்கும் சக்தியோடு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவர் ஒருவரின் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்மையை அதிகரிப்பதில் வயாகரா மாத்திரையின் சக்தியை விட அதிகமான சக்தி தர்பூசணி பழத்துக்கு உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


கோடைகாலமும் தர்பூசணியும் 

இயற்கையானது அந்தந்த சீசனிற்கு ஏற்ப பழங்களையும், காய்கறிகளையும் விளைவிக்கிறது. கோடையில் உஷ்ணத்தை சமாளிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை தர்பூசணிப் பழம். இது உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு எண்ணற்ற நன்மைகளையும் தருகிறது.


தர்பூசணியில் உள்ள சத்துக்கள்

தர்பூசணி பழத்தில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. பசலைக்கீரைக்கு சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏயும் காணப்படுகின்றன. வைட்டமின் பி6, வைட்டமின் பி1 உள்ளன. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன.

இயற்கை வயாக்கரா

தர்பூசணி பழம் ஓர் இயற்கையான 'வயாக்ரா' என்பது தான். 

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்பவர் தர்பூசணி பழம் குறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு வியக்கத்தக்க தகவல்கள் தெரியவந்துள்ளன. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவல் ஒரு இன்ப அதிர்ச்சியாகும். தர்பூசணிக்கு `ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. 

தர்பூசணியில் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம்.

இதயநோயாளிகளுக்கும் நன்மை

தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நம் ஊரில் தாகம் தணிக்க தர்பூசணி பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, விதைகளை நீக்கி விட்டு சாப்பிடுவார்கள். இல்லையெனில் பாழத்தை துண்டுகளாக்கி சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவி சாப்பிடுவார்கள். மேலும் பழ ரசமாகவும் சாப்பிடுவார்கள். ஆனால் இந்த கட்டுரையை படித்த பின்னர் பழத்தின் சிவப்பு பகுதியை விட்டு விட்டு வெண்மை பகுதியைத்தான் அதிகம் சாப்பிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

கோடையில் தாகத்தை தணிக்க பலரும் தர்பூசணியின் தயவை நாடுவது வழக்கம். சாலையோர கடைகளிலும், கோடைகால சிறப்பு ஸ்டால்களிலும் காணக்கிடைக்கும் தர்பூசணி பழத்திற்கு தாகம் தணிக்கும் சக்தியோடு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவர் ஒருவரின் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்மையை அதிகரிப்பதில் வயாகரா மாத்திரையின் சக்தியை விட அதிகமான சக்தி தர்பூசணி பழத்துக்கு உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


கோடைகாலமும் தர்பூசணியும் 

இயற்கையானது அந்தந்த சீசனிற்கு ஏற்ப பழங்களையும், காய்கறிகளையும் விளைவிக்கிறது. கோடையில் உஷ்ணத்தை சமாளிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை தர்பூசணிப் பழம். இது உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு எண்ணற்ற நன்மைகளையும் தருகிறது.


தர்பூசணியில் உள்ள சத்துக்கள்

தர்பூசணி பழத்தில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. பசலைக்கீரைக்கு சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏயும் காணப்படுகின்றன. வைட்டமின் பி6, வைட்டமின் பி1 உள்ளன. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன.

இயற்கை வயாக்கரா

தர்பூசணி பழம் ஓர் இயற்கையான 'வயாக்ரா' என்பது தான். 

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்பவர் தர்பூசணி பழம் குறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு வியக்கத்தக்க தகவல்கள் தெரியவந்துள்ளன. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவல் ஒரு இன்ப அதிர்ச்சியாகும். தர்பூசணிக்கு `ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. 

தர்பூசணியில் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம்.

இதயநோயாளிகளுக்கும் நன்மை

தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நம் ஊரில் தாகம் தணிக்க தர்பூசணி பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, விதைகளை நீக்கி விட்டு சாப்பிடுவார்கள். இல்லையெனில் பாழத்தை துண்டுகளாக்கி சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவி சாப்பிடுவார்கள். மேலும் பழ ரசமாகவும் சாப்பிடுவார்கள். ஆனால் இந்த கட்டுரையை படித்த பின்னர் பழத்தின் சிவப்பு பகுதியை விட்டு விட்டு வெண்மை பகுதியைத்தான் அதிகம் சாப்பிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

'ஜிம்'முக்கு போறீங்களா?: இதை படிச்சிட்டுப் போங்க...

பொதுவாக அனைவரும் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆண்கள் என்றால் சினிமா கதாநாயகனைப் போல் ‘சிக்ஸ்பேக்‘ வைக்கவும், பெண்கள் கட்டழகு பெறவும் ஜிம் செல்வார்கள். கட்டழகைப் பெற அவர்கள் ஜிம்மில் பெரிய எடையைத் தூக்கி பயிற்சி செய்வர். ஆனால் தற்போது கஷ்டப்பட்டு பெரிய எடை தூக்க வேண்டிய அவசியமில்லை, சிறிய எடையைத் தூக்கி பயிற்சி செய்தாலே போதும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கனடா மெக்மாஸ்டர் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தசைகள் உருவாக்கத்தில் பெரிய எடைகளை விட, சிறிய எடைகள் அதிக பலன் தருகின்றன என்கின்றனர். வழக்கமாக செய்யப்படும் தீவிர பயிற்சிக்குப் பதிலாக, அதிக நேரம் சிறிய எடையைத் தூக்குவது, தசை உருவாக்கச் செயல்பாட்டைத் தூண்டி அதிக தசைகள் உருவாக வைக்கும் என்று இந்த ஆய்வின் முன்னணி ஆய்வாளரான நிக்கோலஸ் பர்ட் கூறுகிறார்.


இதற்குக் காரணம் அதிக எடை தூக்குபவர்கள் அப்பயிற்சியை சிறிது நேரமே செய்ய முடியும் என்பதால் ஜிம் நேரம் சீக்கிரம் முடிந்துவிடுகிறது. ஆனால் சிறிய எடையைத்  தூக்கினால் அதிக நேரம் ஜிம்மில் இருக்க வேண்டியிருக்கும். குறைந்த நேரம் அதிக எடையைத் தூக்குவதை விட, அதிக நாட்கள் குறைந்த எடையைத் திரும்பத் திரும்ப தூக்குவதால், தசை உருவாக்கத் தூண்டல் பல நாட்கள் நீடிக்கும். எனவே நீண்ட நாட்கள் அழகாக இருக்கவும் முடியும்.


ஆகவே கஷ்டப்படாமல் புத்திசாலித்தனமாக எடை தூக்குங்க!